விடை தேடும் வினாவில் சிறப்பாக முடிவடைந்த காதல் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற பிரசன்னா வுக்கு ரூ. 500 மதிப்புள்ள புத்தகங்களை பாஸ்டன் பாலா பரிசாக வழங்கினார்.
கணினி ஓவியப்போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது.(சில மாற்றங்களுக்காக இன்று வரை நீட்டிக்கப் பட்டிருந்தது)... அடுத்த வாரத்தில் ஓவியப் போட்டி வெற்றியாளர் குறித்த அறிவிப்பு வரும்.
-oOo-
இன்றைய போட்டி
ஆசிரியர் தினம் வரவிருக்கிறது. அடுத்த போட்டி ஆசிரியர்களைக் கவுரவிக்கும் போட்டியாக அமைகிறது.
சின்னவயதில் இருந்தே ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதர்ச ஹீரோ இருப்பார். சின்னக் குழந்தைக்கு அம்மாவை அடுத்து அதன் அப்பாவே முதல் ஆதர்சமாக இருக்கலாம். அடுத்ததாக பள்ளிக்குச் செல்லும்போது ஆசிரியர் அல்லது ஆசிரியை ஒவ்வொரு குழந்தைக்கும் ஆதர்ச வழிகாட்டியாக இருப்பார். பள்ளிப் பருவம் முடிவதற்குள் வந்து போகும் எத்தனையோ ஆசிரியர்களில் (இருபால்) எவரேனும் ஒருவராவது மனதில் நிற்கும் ஆசிரியராக நிச்சயம் இருப்பார். அதிலும் சிலருக்கு வாழ்வில் என்றுமே மறக்கவே முடியாத ஒருவராக இருப்பார்.
வாழ்வின் இக்கட்டான தருணங்களில் வழிகாட்டியவராகவோ, தவறுகளில் இருந்து திருந்தி முன்னேறக் காரணமாக இருந்தவராகவோ இருக்கலாம். (சிலருக்கு எதிர் விளைவுகள் கூட இருக்கலாம்.) எப்படியோ உங்களின் மறக்க முடியாத ஆசிரியர் பற்றி, அதற்குக் காரணமான நிகழ்வு, நிகழ்வுகள் பற்றி சுவையாக எழுதி பதிவாக இடவோ மின்னஞ்சலில் அனுப்பவோ செய்யுங்கள். சிறப்பான பகிர்வுக்கு பரிசு....உண்டு.
நீங்கள் விரும்பினால், முடியுமானால் உங்கள் ஆசிரியருக்கும் ஒரு நினைவுப் பரிசை வழங்கலாம்.
பங்கேற்பாளர்கள் ஒப்புதல் தரும் சிறப்பான கட்டுரைகள் தொகுத்து சிறு ஆசிரியர் மலராக வெளியிடும் திட்டமும் இருக்கிறது.
எனவே ஒருவருக்குப் புத்தகப் பரிசு...இன்னும் பங்கேற்பாளர்கள் பலரின் படைப்புகள் புத்தகமாக வரும் வாய்ப்பு...
இந்தப் போட்டிக்கான எண்ணமும் செயலும்: சீமாச்சு, பாஸ்டன் பாலா.
-oOo-
போட்டிக்கான படைப்புகளை பதிவுகளில் மறக்க முடியாத ஆசிரியர் என்ற தலைப்பில் பதிய வேண்டும். குறிச்சொல் (label: ஆசிரியர்தினம் (no space))
மின்னஞ்சல் மூலம் அனுப்புவதாக இருந்தால் subject பகுதியிலும் மறக்க முடியாத ஆசிரியர் என்று குறிப்பிட வேண்டும்.
பதிவுச் சுட்டி அல்லது மின்னஞ்சலில் அனுப்பிய விவரம் இங்கே பின்னூட்டத்தில் குறிப்பிட வேண்டும்.
போட்டி முடிவு நாள்: ஆகஸ்ட் 31.
பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...
Wednesday, August 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)



4 comments:
செப்டம்பர் 5. ஆசிரியர் தினம்.
உங்களைக் கவர்ந்த ஆசிரியரை கவுரவிக்க வாருங்கள்.
NanRi.
AsiriyarkaLai ninaikkavum,
kauravikkavum
pathivittathaRku nanRi.
அன்புடன் குழுமத்தில் Notice Board அறிவிப்பு அனுப்பியிருக்கேன் சிந்தாந்தி.
//சிந்தாந்தி//
சிந்தாநதி :)
Post a Comment