பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Wednesday, August 15, 2007

ஆசிரியர் தின பரிசுப் போட்டி!

விடை தேடும் வினாவில் சிறப்பாக முடிவடைந்த காதல் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற பிரசன்னா வுக்கு ரூ. 500 மதிப்புள்ள புத்தகங்களை பாஸ்டன் பாலா பரிசாக வழங்கினார்.

கணினி ஓவியப்போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது.(சில மாற்றங்களுக்காக இன்று வரை நீட்டிக்கப் பட்டிருந்தது)... அடுத்த வாரத்தில் ஓவியப் போட்டி வெற்றியாளர் குறித்த அறிவிப்பு வரும்.

-oOo-

இன்றைய போட்டி

ஆசிரியர் தினம் வரவிருக்கிறது. அடுத்த போட்டி ஆசிரியர்களைக் கவுரவிக்கும் போட்டியாக அமைகிறது.

சின்னவயதில் இருந்தே ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதர்ச ஹீரோ இருப்பார். சின்னக் குழந்தைக்கு அம்மாவை அடுத்து அதன் அப்பாவே முதல் ஆதர்சமாக இருக்கலாம். அடுத்ததாக பள்ளிக்குச் செல்லும்போது ஆசிரியர் அல்லது ஆசிரியை ஒவ்வொரு குழந்தைக்கும் ஆதர்ச வழிகாட்டியாக இருப்பார். பள்ளிப் பருவம் முடிவதற்குள் வந்து போகும் எத்தனையோ ஆசிரியர்களில் (இருபால்) எவரேனும் ஒருவராவது மனதில் நிற்கும் ஆசிரியராக நிச்சயம் இருப்பார். அதிலும் சிலருக்கு வாழ்வில் என்றுமே மறக்கவே முடியாத ஒருவராக இருப்பார்.

வாழ்வின் இக்கட்டான தருணங்களில் வழிகாட்டியவராகவோ, தவறுகளில் இருந்து திருந்தி முன்னேறக் காரணமாக இருந்தவராகவோ இருக்கலாம். (சிலருக்கு எதிர் விளைவுகள் கூட இருக்கலாம்.) எப்படியோ உங்களின் மறக்க முடியாத ஆசிரியர் பற்றி, அதற்குக் காரணமான நிகழ்வு, நிகழ்வுகள் பற்றி சுவையாக எழுதி பதிவாக இடவோ மின்னஞ்சலில் அனுப்பவோ செய்யுங்கள். சிறப்பான பகிர்வுக்கு பரிசு....உண்டு.

நீங்கள் விரும்பினால், முடியுமானால் உங்கள் ஆசிரியருக்கும் ஒரு நினைவுப் பரிசை வழங்கலாம்.

பங்கேற்பாளர்கள் ஒப்புதல் தரும் சிறப்பான கட்டுரைகள் தொகுத்து சிறு ஆசிரியர் மலராக வெளியிடும் திட்டமும் இருக்கிறது.

எனவே ஒருவருக்குப் புத்தகப் பரிசு...இன்னும் பங்கேற்பாளர்கள் பலரின் படைப்புகள் புத்தகமாக வரும் வாய்ப்பு...

இந்தப் போட்டிக்கான எண்ணமும் செயலும்: சீமாச்சு, பாஸ்டன் பாலா.

-oOo-

போட்டிக்கான படைப்புகளை பதிவுகளில் மறக்க முடியாத ஆசிரியர் என்ற தலைப்பில் பதிய வேண்டும். குறிச்சொல் (label: ஆசிரியர்தினம் (no space))

மின்னஞ்சல் மூலம் அனுப்புவதாக இருந்தால் subject பகுதியிலும் மறக்க முடியாத ஆசிரியர் என்று குறிப்பிட வேண்டும்.

பதிவுச் சுட்டி அல்லது மின்னஞ்சலில் அனுப்பிய விவரம் இங்கே பின்னூட்டத்தில் குறிப்பிட வேண்டும்.

போட்டி முடிவு நாள்: ஆகஸ்ட் 31.

Monday, July 23, 2007

கணினி ஓவியப் போட்டி!

சிறப்பான காதல் கவிதைகளை எழுதி இணையக் கவிஞர்கள் பங்கேற்ற காதல் கவிதைப் போட்டி இனிதே நிறைவுற்று (முடிவுகள் அறிவிக்க சற்று தாமதம் நேர்ந்த போதும்) பிரசன்னா (குறைகுடம்) எழுதிய கவிதை பரிசுக்குரியதாக தேர்வு செய்யப் பட்டுள்ளது.

விதிமுறைகள் காரணமாக சில நல்ல கவிதைகளும் வடிகட்டப் பட்டிருக்கலாம். எனினும் நல்ல கவிதைகள் வாசிக்கக் கிடைத்தமைக்கு முதலாவதாக கவிஞர்களுக்கு நன்றி. போட்டி விதிமுறைகள்படி முதற்கட்ட தேர்வை நடத்தி விதிமுறைகளுக்கு உட்பட்ட கவிதைகளை தேர்வு செய்து தந்த சேதுக்கரசி, இறுதிக்கட்டத் தேர்வில் கவித்துவமும் காதல் உணர்வும் மிக்க சிறந்த கவிதையாக ஒன்றை தேர்வு செய்து தர கேட்ட போது அதன்படி பரிசுக்கவிதையை தேர்வு செய்த தமிழ்நதி ஆகியோருக்கு நன்றிகள்.

இதில் சுவையான ஒரு தகவல்... நெருக்கமான போட்டி இருந்தால் இரண்டு கவிதைகள் தேர்வு செய்யலாம் என்று கூறி இருந்தேன். தமிழ்நதிக்கு அனுப்பப் பட்ட பிரதியில் கவிஞர்கள் பெயர் இணைக்கப் படவில்லை. அதன்படி தமிழ்நதி தேர்வு செய்த இரண்டு கவிதைகளுமே பிரசன்னாவுடையது என்பதில் பிரசன்னா இரட்டை மகிழ்ச்சி அடையலாம். வாழ்த்துக்கள் பிரசன்னா!

( பிரசன்னா எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். sinthanadhi at gmail)

*

அடுத்ததாக ஒரு புகைப்படப் போட்டி வைக்கும் எண்ணம் இருந்தது. கடந்த போட்டி முடிவுகள் அறிவிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக அது நிறைவேறவில்லை. தற்போது செல்லா குழுவினர் புகைப்பட போட்டிக்கு என்றே ஒரு வலைத்தளம் துவங்கி தொடர்ந்து போட்டிகள் நடத்த இருப்பதால் தற்போது புகைப்பட போட்டிக்கு பதிலாக ஒரு ஓவியப் போட்டி நடத்தலாம் என்று நினைக்கிறேன்.

கணினி ஓவியப் போட்டி.

விதிமுறைகள்

ஓவியம் கணினியில் வரையப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும்.

வரைதூரிகையாக மைக்ரோசாப்ட் பெயின்ட் மென்பொருள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். எந்தவித ஸ்பெசல் எபக்ட்டும் பயன்படுத்தக் கூடாது என்பதால் இந்த விதிமுறை.

ஓவியம் 400x300 அளவில் வரைந்து சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

பெயின்ட் மென்பொருள் கொண்டு வரையக்கூடிய எத்தனை வண்ணங்களும் பயன்படுத்தலாம்.

கருப்பொருள் எதைப்பற்றியதாகவும் இருக்கலாம். ஓவியத் தலைப்பு மிகவும் முக்கியம்.

பதிவில் இட்டுக் கொண்டு இணைப்புத் தரலாம். அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். sinthanadhi at gmail

போட்டி முடிவு நாள் : ஜூலை 31.

Monday, April 30, 2007

காதல் கவிதைப் போட்டி

இதுவரை பட்டி மன்ற போட்டிகளாக பார்த்து வந்த உங்களுக்கு இன்று சற்று வித்தியாசமாக காதல் கவிதைப் போட்டி...!

இது வழக்கமான காதல் கவிதைப் போட்டி அல்ல.

இதில் சில விதிமுறைகள் உண்டு.

முதலாவதாக காதல், இதயம், அவன், அவள், நான், நீ , பெண்ணே, கண்ணே, அன்பே என்னும் ஒன்பது சொற்களும் கவிதையில் இடம் பெற்றிருக்க கூடாது.

எந்த ஒரு சொல்லும் கவிதையில் இரண்டு முறை இடம்பெறக் கூடாது.

பிறமொழிச் சொற்களும் இடம்பெறக் கூடாது.

கவிதை இரண்டு வரி குறும்பாவாகவோ பெரிய கவிதையாகவோ இருக்கலாம். காதலை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே எங்காவது வெளியிடப்பட்ட பழைய படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

கவிதையை இங்கே பின்னூட்டமாகவோ, தங்கள் பதிவுகளில் இட்டு சுட்டி தரவோ செய்யலாம்.

வழக்கம் போல வெற்றி பெறும் ஒருவருக்கு புத்தகப் பரிசு உண்டு.

இப்போட்டிக்கான கடைசி நாள்: மே 10.

Monday, April 9, 2007

☺ மீண்டும் பட்டிமன்றம்

கிரிக்கெட் போட்டிக்கு ஒரே ஒரு ஆக்கம் மட்டுமே வந்துள்ள நிலையில் அந்தப் போட்டிக்கு இன்னும் தொடரும் போட்டுட்டு...

இன்றைய பட்டிமன்ற தலைப்புக்கு வருவோம்.

இது வழக்கமான பட்டி மன்ற விவாதம். ஒருவர் சொன்ன கருத்தை மறுத்தும் ஒட்டியும் புதிய கருத்தும் சொல்ல வேண்டும்.வழக்கம் போல சிறந்த கருத்துக்கு பரிசு உண்டு. இந்த வார போட்டிக்கு பரிசு வழங்குபவர் பொன்ஸ்.

-oOo-

அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்கிறார்கள். நல்லவங்க அரசியலுக்கு வருவதில்லை என்றும் சொல்கிறார்கள். இது இப்படி இருக்க இப்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளெல்லாம் அரசியல் களங்களாகி விட்டன. அரசியல் கட்சிகளில் மாணவர் அணி என்று கூட தனியா வச்சிருக்காங்க....

படிக்கிற வயசில மாணவர்களுக்கு அரசியல் தேவையா என்று ஒரு தரப்பு குரல் கொடுக்கிறது. இப்போது நீங்க சொல்லுங்க...

மாணவர்களுக்கு படிக்கிற வயசில் அரசியல்

தேவை X தேவையில்லை.

Thursday, March 29, 2007

அதிரடிப்போட்டி: கிரிக்கெட் சந்திப்பு.

நண்பர்களுக்கு வணக்கம்.

இந்த வாரம் கிரிக்கெட் தொடர்பாக போட்டி வைக்க வேண்டுமென்று எண்ணியிருந்தோம். ஆனால் இந்திய அணி மண்ணைக் கவ்விய சோகத்தில் நாங்கள் நினைத்திருந்த கிரிக்கெட் தலைப்புகள் எல்லாம் வீணாகிப் போய் விட்டன. எதையாவது விவாதிக்கச் சொன்னால் எங்களையே கிழிச்சி தோரணம் கட்டிடுவீங்களோன்னு பயம் வேற... ;)

அதனால் உங்க கோபத்துக்கு வடிகாலாகவும் உங்க கற்பனைக்கு தூண்டுதலாகவும் ஒரு போட்டி.

இந்த சந்தர்ப்பத்தில் (அ)சந்தர்ப்பவசமாக இந்திய கிரிக்கெட் வீர்ர் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

சந்திப்பது யாரை என்று கூறி கற்பனை உரையாடலை எழுதுங்கள். சிறந்த கற்பனைக்கு (புத்தகப்) பரிசு உண்டு


Tuesday, March 20, 2007

போட்டி : பதிவுகளில் காமெடி வேண்டுமா? கருத்து வேண்டுமா?

இந்த பரிசுப் போட்டிப் பதிவு ஆரம்பித்து இதுவரை நான்கு பரிசுப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. முதலாவது போட்டியில் வென்ற முத்துலட்சுமிக்கு புத்தகப் பரிசு வழங்கப் பட்டது. செந்தழல் ரவி பரிசை வழங்கினார்.

கடந்த மூன்று போட்டிகளில் வென்ற பொன்ஸ், நிலா, அருட்பெருங்கோ ஆகியோருக்கான பரிசுப் புத்தகங்கள் இணணயதள பிரச்சினை காரணமாக வாங்கி அனுப்ப இயலாமல் தாமதமாகியுள்ளது. தற்போது நிலைமை சீராகி உள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் பரிசுகள் வழங்க ஆவன செய்யப்படுகிறது.

சிறில் அலெக்ஸ், மங்கை, செந்தழல் ரவி ஆகியோர் இப்போட்டிகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளனர்.

இன்று ஐந்தாவது பரிசுப் போட்டி நடைபெறுகிறது. இந்த வார போட்டிக்கு பாஸ்டன் பாலா பரிசு வழங்குகிறார்.

இன்றைய பட்டிமன்ற விவாதம் வலைப்பதிவுகளின் கருப்பொருள் பற்றியதாக அமைகிறது. ஆரம்பிக்கலாமா?

(இந்த போட்டியின் கருப்பொருள், காரணம் மற்றும் உருவான கதையை போட்டிக்குப் பின் நடுவர் விளக்குவார்.)

"பதிவுகள் எழுதும் போது காமெடிக்கு தனி மதிப்பு இருப்பது நமக்குத் தெரியும்.
வெளியில் அழுகை சீரியல்களிலிருந்து தப்பித்து தமிழ்ப்பதிவுலகில் சுற்றும் மக்கள்
நகைச்சுவையையே மிகவும் விரும்புகிறார்கள். ஆனால், எழுதும் பொழுது அதிக பின்னூட்டம்
வருகிறது என்ற காரணத்திற்காக, வெறும் காமெடி பதிவுகள் மட்டுமே எழுதுவது

சரியா? தவறா?

நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக
அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுப்பதற்கு பதிவுகளா? அல்லது,
நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல
நமது பதிவுகளா?"

இது முழுக்க பட்டிமன்ற பாணி தொடர் விவாதமாக அமைய வேண்டும். ஒருவர் சொல்வதை காரணங்களோடு மற்றவர் மறுத்துச் சொல்ல வேண்டும். தங்கள் தரப்புக்கு தெளிவான புதிய காரணங்களை முன்வைக்க வேண்டும். ரெடி..ஜூட்.

Monday, March 12, 2007

சொல்...சொல்லுங்க...(போட்டி)

மகளிர் தின பட்டிமன்றத்தில் முத்துலட்சுமி அணியும் நிலா அணியும் மிகச்சிறப்பாக மோதின. அனல் பறக்கும் விவாதங்களில் முத்துலட்சுமி அணியில் கயல்விழி, சக்தி, மாசிலா ஆகியோரும் சில கருத்துக்களை எடுத்து வைத்தார்கள். நிலாவின் அணிக்காக சென்ஷி, பொன்ஸ், கவிதா ஆகியோர் வாதிட்டனர்.

இப்போட்டியின் நடுவர் யெஸ்.பாலபாரதி போட்டியில் வென்று பரிசுக்குரியவராக நிலா தேர்ந்தெடுக்கப் படுவதாக அறிவித்தார்.

நிலாவுக்கு வாழ்த்துக்கள்!

-oOo-

சூட்டோடு சூடாக இன்றைய போட்டியையும் அறிவித்து விடுகிறேன். இம்முறை விவாதமெல்லாம் இல்லை. கொஞ்சம் மூளைக்கு வேலை. அவ்வளவுதான்.

போட்டி இதுதான்.

தமிழில் ஒரு வாக்கியம் எழுதுங்கள்.

ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிச்சொல் இருக்கக்கூடாது. ஒரே சொல் திரும்ப வரக்கூடாது. ஒரே எழுத்து மூன்று தடவைக்கு மேல் வரக்கூடாது. ஒரு மெய்யெழுத்தும் அதன் உயிர்மெய் வரிசையில் உள்ள பிற எழுத்துகளுமாக ஆறு தடவைக்கு மேல் வரக்கூடாது. (உதாரணமாக க என்பது மூன்று தடவை வரக்கூடாது. க, கு. கை, க் என்ற க வரிசை எழுத்துகள் ஆறு தடவைக்கு மேல் வரக்கூடாது.)

ஒழுங்கான வாக்கியமாக இருக்க வேண்டும். யாருடையது அதிக சொற்கள் அல்லது எழுத்துகள் கொண்ட ஒழுங்கான வாக்கியமோ அதற்குப் பரிசு... பல வாக்கியங்கள் நெருக்கமான போட்டியில் இருந்தால் கருத்துள்ள வாக்கியம் பரிசு பெறும்.


Thursday, March 8, 2007

மகளிர்தின பரிசுப் போட்டி

பெண்ணியத்தை பெண்களும்

தலித்தியத்தை தலித்துகளும்

மட்டுமே பேச வேண்டும்.

சரி...தவறு...

இதுதான் இன்றைய விவாதக்கள போட்டி.

பட்டிமன்றம் ஆரம்பம்.



சொல்லுங்க...வெல்லுங்க...

தமிழில் புதிர்கள், போட்டிகள், பட்டிமன்ற பாணி கருத்துரைகள், குறுகவிதைப்போட்டிகள், என பலவகைப்போட்டிகளை முன்வைத்து இத்தளம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கான பொது விதிமுறைகள்.

தனிமனித தாக்குதல், மதம், போன்றவை விவாதங்களில் இடம்பெறாமல் இருப்பது அவசியம்.

போட்டியாளர்கள் எவரும் தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.

ஆனால் அனைவரும் பரிசு பெறும் வாய்ப்பை உறுதி செய்யும் விதமாக ஒரு முறை போட்டியில் வென்றவருக்கு அடுத்த மூன்று மாதகாலம் நேரடி பரிசுகள் வழங்கப் படமாட்டாது.

ஏற்கனவே பரிசு பெற்றவர் தொடரும் போட்டிகளிலும் சரியான பதில்கள் கூறி பரிசுக்கு தகுதி பெற்றால் அவருக்கு சிறப்புப் புள்ளிகள் வழங்கப் படும்.

பின்னர் மூன்றாம் மாத இறுதியில் புள்ளிகள் கணக்கிடப் பட்டு அதிக புள்ளிகள் பெற்றவருக்கு சிறப்பு பரிசு வழங்கப் படும்.

குறிப்பிட்ட புதிர்கள் போன்ற போட்டியில் பலர் சரியான பதில்கள் கூறி பரிசுக்கு தகுதி பெற்றால் புள்ளிகள் வழங்கப் பட்டு பின்னர் புள்ளிகள் அடிப்படையில் பரிசு வழங்கப் படும்.

வெற்றிப் புள்ளிகள் அனைத்துப் போட்டிகளுக்கும் உண்டு.

வாரம் ஒரு முறை மட்டும் புத்தகப் பரிசுக்கான போட்டி நடைபெறும். இடையில் வேறு புதிர் போட்டிகளும் நடத்தப் படலாம்.

புள்ளிகளின் அடிப்படையில் பரிசுகள் பின்னர் வழங்கப் படும்.

பரிசுப் போட்டியில் வென்றவர் விதிமுறைப்படி தேர்வு செய்யும் புத்தகங்கள் அவருக்கு பரிசாக வழங்கப் படும்.

கேள்விகளை சரியாக புரிந்து பதிலளிப்பது முக்கியம். கேள்விகளின் தன்மையே சில நேரங்களில் பதிலை நிர்ணயிக்கலாம்.

இன்னும் சில நிமிடங்களில் பெண்கள் தின சிறப்புப் பட்டி மன்ற விவாதப் போட்டிக்கு தயாராகுங்கள்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Tuesday, February 27, 2007

அதிரடி பரிசுப் போட்டி-3

Image and video hosting by TinyPicலைப்புப் போட்டிக்கு எதிர்பார்த்த அளவு பதில்களும் வரவில்லை. எதிர்பார்த்த மாதிரி கேட்சிங் தலைப்பும் வாசகமும் கிடைக்கவில்லை.

தலைப்பும் டிஸ்கிரிப்ஷனும் தாருங்கள் என்று கேட்டிருந்தோம். ஆனால் அப்படி சரியாக எதுவும் வரவில்லை. மின்னஞ்சலில் அனானியாக வந்த ஒரு மடலில் இருந்த வாசகம் சில மாற்றங்களுடன் (பதில் தேடும் கேள்வி-பதிலைச் சொல்லுங்க பரிசை வெல்லுங்க) ஓரளவு திருப்தியானதாக தேர்வு செய்யப் படுகிறது. அனானி பரிசுக்கு பெயர், முகவரி தரவிரும்பாததாலோ என்னவோ பரிசு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

நாங்கள் எதிர்பார்த்த நகைச்சுவையான ஒரு கேட்சிங் வாசகம் இன்னும் கிடைக்காத நிலையில் இந்தப் போட்டி தொடர்ந்து நிலவில் இருக்கும். நல்ல வாசகம், தலைப்பு இனியும் நீங்கள் அனுப்பலாம். நல்ல தலைப்பு, வாசகம் தேர்வு செய்யப் படும்போது பரிசு வழங்கப் படும்.

-oOo-

சரி..அதிருக்கட்டும். இன்றைய போட்டிக்கு வருவோம்.

புகழ்பெற்ற இணைய தளங்களான
கூகுள், யாகூ
இரண்டில் எது சிறந்தது? ஏன்?

இது பட்டிமன்ற விவாதம் போன்றதுதான். முன்னவர் பதில்களை மறுத்தும் நிரூபிக்க வேண்டும். அனுபவப்பூர்வமான சாதக பாதகங்களை எழுத முயலுங்கள். சிறந்த விவாதக் கருத்துக்கு பரிசு உண்டு. வெற்றி பெறும் போட்டியாளர் வித்லோகா தளத்தில் இருந்து தேர்வு செய்யும் புத்தகம் பரிசாக வழங்கப் படும். இந்த வார பரிசை வழங்குபவர் சிறில் அலெக்ஸ்.


Monday, February 19, 2007

பரிசுப்போட்டி-2


http://tamiltalk.blogspot.com என்ற இந்த தளம் போட்டி, புதிர்கள், பட்டிமன்ற விவாதம் போன்றவைகளுக்கானது. இங்கு தொடர்ந்து போட்டிகள் புதிர்கள் இடம்பெற இருக்கின்றன. வாரம் ஒரு முறை அல்லது குறைந்தது மாதம் இருமுறையாவது பரிசுகளும் வழங்க இருக்கிறோம்.

புதிய கருத்துக்களுக்கும், கற்பனை வளத்துக்கும் பல்வேறு சிந்தனைகளின் ஒருங்கிணைப்புக்கும் ஏற்றதாக இந்த தளத்தை கொண்டு செல்ல உங்களின் ஒத்துழைப்பை நாடுகின்றேன்.

முதல் கட்டமாக தளத்தை தயார் படுத்தி சிறப்பாக வெளிப் படுத்த இந்த போட்டியில் உங்கள் பங்களிப்புக்கு ஒரு போட்டி. இந்த தளத்துக்கு ஒரு நல்ல தலைப்புப் பெயர் மற்றும் டிஸ்க்ரிப்ஷன் சொல்லுங்க. தேர்ந்தெடுக்கப் படும் தலைப்புக்கு பரிசு உண்டு.

பார்த்தவுடன் கவர்வதாக நல்ல கிரியேட்டிவாக தலைப்பு இருக்க வேண்டும். நகைச்சுவையும் முயற்சிக்கலாம். உங்கள் கற்பனைகளை உடனே ஆரம்பிக்கலாம்...ரெடி..ஸ்டார்ட்...

Sunday, February 18, 2007

எனக்குத் தெரியாது!


ஆசிரியர்: ஏண்டா வீட்டுப் பாடம் செஞ்சிட்டு வரல்லே...கைய நீட்டுடா...

மாணவன்: ம்ஹூம் நான் நீட்ட மாட்டேன். எங்கப்பா கைநீட்டக் கூடாதுன்னு சொல்லியிருக்காரு.

ஆசிரியர்: ஏண்டா? எதுக்காக அப்படிச் சொன்னாரு?

மாணவன்: நாம ரொம்ப மானமுள்ள குடும்பம். யாருகிட்டயும் கைநீட்டக் கூடாதுண்ணு எங்கப்பா எங்கிட்ட சொல்லியிருக்காரு.

-oOo-

மாணவன்: ஐயா...எங்க கிட்ட எப்பவும் கேள்வி கேக்கிறீங்களே? நாங்க உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கட்டுமா?

ஆசிரியர்: கண்டிப்பா கேட்கலாம். உங்க சந்தேகங்களை தீர்த்து வைக்கத் தானே நான் இருக்கேன்?

மாணவன்: சரி ஐயா! ஆனா எனக்குத் தெரியாதுன்னு மட்டும் சொல்லக் கூடாது!

ஆசிரியர்: என்னடா...எனக்குத் தெரியாத கேள்வி கேக்கப் போறியாக்கும்..அதெல்லாம் இல்ல. என்ன கேட்டாலும் எனக்குத் தெரியாதுன்னு சொல்ல மாட்டேன். சந்தேகமா இருந்தா நாளைக்கு ரெபர் பண்ணியாவது உன்னோட கேள்விக்கு பதில் சொல்லுவேன். தயங்காம கேளுப்பா?

மாணவன் கேள்வியைக் கேட்டான். ஆனால் ஆசிரியர் எனக்குத் தெரியாது என்று தான் பதில் சொன்னார். அப்படியானால் மாணவன் என்ன கேள்வி கேட்டிருப்பான்?

Friday, February 16, 2007

மிளகாய் என்றால் என்ன?

து ஒரு எளிமையான போட்டி. இதற்கு பட்டி மன்ற விவாதமெல்லாம் தேவையில்லை. வெறும் பதிலே போதும்.

பதில்கள் போட்டி முடிவில்தான் வெளியிடப் படும். இங்க பதில் சொல்லீட்டு பிரதான பதிவில் (சிந்தாநதி)ஆஜர் மட்டும் கொடுத்திட்டுப் போகலாம். அங்கே பதில் சொன்னால் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப் படமாட்டாது.

இந்தப் போட்டிக்கு பரிசெல்லாம் கிடையாது. ஆனால் பட்டம் உண்டு. கவனிச்சுகிட்டீங்களா?

போட்டி இதுதான்: இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க...

மிளகாய் என்றால் என்ன?




Wednesday, February 14, 2007

காதலர் தினம் - V

Image and video hosting by TinyPicகாதலர் தினம் வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி பல இடங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது. நீங்களும் அந்த விவாதத்தில் ஏற்கனவே பங்கேற்றிருப்பீர்கள். ஆனாலும் காதலர் தினத்திலேயே நடக்கும் இந்த பட்டி மன்றத்தில் கலந்து கொண்டு நீங்கள் விவாதிப்பது ஒரு சுவையான நிகழ்வாக இருக்கக் கூடும்.

காதலர் தினம் பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார யுக்தி என்பது உட்பட, காதலுக்கும் காதலர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் தேவையா என்பது வரை விவாதங்கள் நடந்து வந்தாலும் காதலர் தினம் என்னவோ களை கட்டித்தான் வருகிறது.

காதலர் தின வலைப்பதிவுகளும் கடந்த வாரம் முதலே எழுதப் பட்டு வருகின்றன. இன்றும் ஏராளமான பதிவுகள் வந்திருக்கின்றன. எனவே காதலர் தின பட்டிமன்றத்தில் பங்கேற்று கருத்துக்களை சொல்லுங்கள்.

சிறந்த விவாதக் கருத்துக்கு பரிசு உண்டு. அது பின்னர் அறிவிக்கப் படும்.

(இதோ அறிவிச்சாச்சு: அருமையான புத்தகங்கள் பரிசு. வழங்குபவர்: செந்தழல் ரவி)

விவாதத் தலைப்பு

காதலர் தினம்

தேவை / தேவையில்லை

வணக்கம்

தமிழ்