பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Monday, April 30, 2007

காதல் கவிதைப் போட்டி

இதுவரை பட்டி மன்ற போட்டிகளாக பார்த்து வந்த உங்களுக்கு இன்று சற்று வித்தியாசமாக காதல் கவிதைப் போட்டி...!

இது வழக்கமான காதல் கவிதைப் போட்டி அல்ல.

இதில் சில விதிமுறைகள் உண்டு.

முதலாவதாக காதல், இதயம், அவன், அவள், நான், நீ , பெண்ணே, கண்ணே, அன்பே என்னும் ஒன்பது சொற்களும் கவிதையில் இடம் பெற்றிருக்க கூடாது.

எந்த ஒரு சொல்லும் கவிதையில் இரண்டு முறை இடம்பெறக் கூடாது.

பிறமொழிச் சொற்களும் இடம்பெறக் கூடாது.

கவிதை இரண்டு வரி குறும்பாவாகவோ பெரிய கவிதையாகவோ இருக்கலாம். காதலை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே எங்காவது வெளியிடப்பட்ட பழைய படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

கவிதையை இங்கே பின்னூட்டமாகவோ, தங்கள் பதிவுகளில் இட்டு சுட்டி தரவோ செய்யலாம்.

வழக்கம் போல வெற்றி பெறும் ஒருவருக்கு புத்தகப் பரிசு உண்டு.

இப்போட்டிக்கான கடைசி நாள்: மே 10.

Monday, April 9, 2007

☺ மீண்டும் பட்டிமன்றம்

கிரிக்கெட் போட்டிக்கு ஒரே ஒரு ஆக்கம் மட்டுமே வந்துள்ள நிலையில் அந்தப் போட்டிக்கு இன்னும் தொடரும் போட்டுட்டு...

இன்றைய பட்டிமன்ற தலைப்புக்கு வருவோம்.

இது வழக்கமான பட்டி மன்ற விவாதம். ஒருவர் சொன்ன கருத்தை மறுத்தும் ஒட்டியும் புதிய கருத்தும் சொல்ல வேண்டும்.வழக்கம் போல சிறந்த கருத்துக்கு பரிசு உண்டு. இந்த வார போட்டிக்கு பரிசு வழங்குபவர் பொன்ஸ்.

-oOo-

அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்கிறார்கள். நல்லவங்க அரசியலுக்கு வருவதில்லை என்றும் சொல்கிறார்கள். இது இப்படி இருக்க இப்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளெல்லாம் அரசியல் களங்களாகி விட்டன. அரசியல் கட்சிகளில் மாணவர் அணி என்று கூட தனியா வச்சிருக்காங்க....

படிக்கிற வயசில மாணவர்களுக்கு அரசியல் தேவையா என்று ஒரு தரப்பு குரல் கொடுக்கிறது. இப்போது நீங்க சொல்லுங்க...

மாணவர்களுக்கு படிக்கிற வயசில் அரசியல்

தேவை X தேவையில்லை.