சிறப்பான காதல் கவிதைகளை எழுதி இணையக் கவிஞர்கள் பங்கேற்ற காதல் கவிதைப் போட்டி இனிதே நிறைவுற்று (முடிவுகள் அறிவிக்க சற்று தாமதம் நேர்ந்த போதும்) பிரசன்னா (குறைகுடம்) எழுதிய கவிதை பரிசுக்குரியதாக தேர்வு செய்யப் பட்டுள்ளது.
விதிமுறைகள் காரணமாக சில நல்ல கவிதைகளும் வடிகட்டப் பட்டிருக்கலாம். எனினும் நல்ல கவிதைகள் வாசிக்கக் கிடைத்தமைக்கு முதலாவதாக கவிஞர்களுக்கு நன்றி. போட்டி விதிமுறைகள்படி முதற்கட்ட தேர்வை நடத்தி விதிமுறைகளுக்கு உட்பட்ட கவிதைகளை தேர்வு செய்து தந்த சேதுக்கரசி, இறுதிக்கட்டத் தேர்வில் கவித்துவமும் காதல் உணர்வும் மிக்க சிறந்த கவிதையாக ஒன்றை தேர்வு செய்து தர கேட்ட போது அதன்படி பரிசுக்கவிதையை தேர்வு செய்த தமிழ்நதி ஆகியோருக்கு நன்றிகள்.
இதில் சுவையான ஒரு தகவல்... நெருக்கமான போட்டி இருந்தால் இரண்டு கவிதைகள் தேர்வு செய்யலாம் என்று கூறி இருந்தேன். தமிழ்நதிக்கு அனுப்பப் பட்ட பிரதியில் கவிஞர்கள் பெயர் இணைக்கப் படவில்லை. அதன்படி தமிழ்நதி தேர்வு செய்த இரண்டு கவிதைகளுமே பிரசன்னாவுடையது என்பதில் பிரசன்னா இரட்டை மகிழ்ச்சி அடையலாம். வாழ்த்துக்கள் பிரசன்னா!
( பிரசன்னா எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். sinthanadhi at gmail)
*
அடுத்ததாக ஒரு புகைப்படப் போட்டி வைக்கும் எண்ணம் இருந்தது. கடந்த போட்டி முடிவுகள் அறிவிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக அது நிறைவேறவில்லை. தற்போது செல்லா குழுவினர் புகைப்பட போட்டிக்கு என்றே ஒரு வலைத்தளம் துவங்கி தொடர்ந்து போட்டிகள் நடத்த இருப்பதால் தற்போது புகைப்பட போட்டிக்கு பதிலாக ஒரு ஓவியப் போட்டி நடத்தலாம் என்று நினைக்கிறேன்.
கணினி ஓவியப் போட்டி.
விதிமுறைகள்
ஓவியம் கணினியில் வரையப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும்.
வரைதூரிகையாக மைக்ரோசாப்ட் பெயின்ட் மென்பொருள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். எந்தவித ஸ்பெசல் எபக்ட்டும் பயன்படுத்தக் கூடாது என்பதால் இந்த விதிமுறை.
ஓவியம் 400x300 அளவில் வரைந்து சமர்ப்பிக்கப் பட வேண்டும்.
பெயின்ட் மென்பொருள் கொண்டு வரையக்கூடிய எத்தனை வண்ணங்களும் பயன்படுத்தலாம்.
கருப்பொருள் எதைப்பற்றியதாகவும் இருக்கலாம். ஓவியத் தலைப்பு மிகவும் முக்கியம்.
பதிவில் இட்டுக் கொண்டு இணைப்புத் தரலாம். அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். sinthanadhi at gmail
போட்டி முடிவு நாள் : ஜூலை 31.
பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...
Monday, July 23, 2007
Subscribe to:
Posts (Atom)